தென்னாப்பிரிக்காவில் பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனாவுக்கு ஒமைக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் சில நாடுகளுக்கு ஏற்கெனவே பரவிவிட்டது. ஒமைக்ரான் வைரஸ் குறித்து உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் விமானப் பயணத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவுகிறதா என பொதுமக்களிடையே அச்சம் நிலவியது. இந்நிலையில், இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் தொற்று கண்டறியப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி பதில் நேரத்தின்போது இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை.
வைரஸ் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய நபர்களிடம் உடனடியாக பரிசோதனை நடத்தப்பட்டு genome sequencing சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இன்று நம்மிடம் நிறைய பரிசோதனைக் கூடங்களும், வசதிகளும் உள்ளன. எந்தவொரு சூழலையும் நம்மால் சமாளிக்க முடியும். ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவுக்குள் நுழையாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி பதில் நேரத்தின்போது இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை.
வைரஸ் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய நபர்களிடம் உடனடியாக பரிசோதனை நடத்தப்பட்டு genome sequencing சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இன்று நம்மிடம் நிறைய பரிசோதனைக் கூடங்களும், வசதிகளும் உள்ளன. எந்தவொரு சூழலையும் நம்மால் சமாளிக்க முடியும். ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவுக்குள் நுழையாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.