ஆப்நகரம்

வெளிமாநிலத் தொழிலாளர்களை நடக்கவிடாதீர் : மத்திய உள்துறை

நடந்து செல்லும் வெளிமாநிலத் தொழிலாளர்களை முகாம்களில் தங்கவைத்து உணவு வழங்கக் கோரி மத்திய உள்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.

Samayam Tamil 11 May 2020, 12:34 pm
வெளிமாநிலத் தொழிலாளர்கள் நடந்தே ஊருக்கு செல்வதை மாநில/யூனியன் பிரதேச அரசுகள் அனுமதிக்க வேண்டாம் என்று மத்திய உள்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil union home secretary ajay bhalla lettered all states to stop movemnet migrant workers by walking
வெளிமாநிலத் தொழிலாளர்களை நடக்கவிடாதீர் : மத்திய உள்துறை


நாடு முழுக்க பல்வேறு துறைகளில் அடிப்படை கூலித் தொழிலாளிகளாக பிறமாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தொழில்கள் முடங்கி, வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருப்பதால், இதுபோன்ற பிறமாநிலத் தொழிலாளர்கள் நடந்தே தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்லத் தொடங்கினர். இதன் விளைவாக நடந்து செல்லும் வழியில் இறப்பது, ஊருக்குச் சென்று களைப்பில் இறப்பது,பாதி வழியில் விபத்தில் இறப்பது என்று கவலையளிக்கும் சம்பவங்கள் நடைபெற்றன.

பிறமாநிலத் தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு என்றே சிறப்பு ‘ஷர்மிக்’ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இருந்தும், வெளிமாநிலத் தொழிலாளர்கள் நடந்து செல்வது தொடர்ந்து வருகிறது.

பதிவு செஞ்சும் பலனில்லையா? - சென்னை டூ உ.பி - இப்படியொரு முடிவெடுத்த தொழிலாளர்கள்!

இந்நிலையில், இப்படி நடந்து செல்வதற்கு மாநில அரசுகள் அனுமதிக்கக்கூடாது என்றும், சாலைகளில் தங்குவதற்கு விடக்கூடாது என்றும் மத்திய உள்துறை செயலர் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


மேலும், “அப்படியாக நடந்து செல்லும்/ நடந்து செல்லும் நிலையில் இருப்பவர்களைக் கண்டறிந்து அரசு முகாம்களில் தங்க வைத்து உணவளிக்க வேண்டும்” என்றும் அந்தக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அடுத்த செய்தி