ஆப்நகரம்

மாட்டுச் சாணத்தில் புதிய வகை பெயிண்ட்; இதுல இவ்ளோ விஷயம் இருக்குதாம்!

சில மணி நேரங்களில் காய்ந்துவிடும் வகையில் மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட விஷமில்லாத பெயிண்ட் இன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Samayam Tamil 12 Jan 2021, 9:19 am
நம் அன்றாட வாழ்வில் மாட்டுச் சாணம் மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். இதனை நாம் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறோம். மேலும் மாட்டுச் சாணம், பசு மாட்டு சிறுநீர் ஆகியவற்றை சந்தைப்படுத்த மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் காதி மற்றும் கிராம தொழிற்துறை ஆணையம் மாட்டுச் சாணம் மூலம் விஷமில்லாத பெயிண்ட்டை தயாரித்துள்ளனர்.
Samayam Tamil union minister nitin gadkari to launch cow dung based vedic paint developed by khadi commission
மாட்டுச் சாணத்தில் புதிய வகை பெயிண்ட்; இதுல இவ்ளோ விஷயம் இருக்குதாம்!


காதி பிராக்ரிதிக் பெயிண்ட்

இதற்கு ‘காதி பிராக்ரிதிக் பெயிண்ட்’ (Khadi Prakritik Paint) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான திட்டம் கடந்த மார்ச் 2020ல் KVIC எனப்படும் காதி கிராம தொழிற்துறை ஆணையம் மூலம் முன்னெடுக்கப்பட்டது. பின்னர் ஜெய்ப்பூரில் உள்ள குமாரப்பா தேசிய ஹேண்ட்மேடு பேப்பர் இன்ஸ்டிடியூட்டில் பெயிண்ட் தயாரிப்பிற்கான வேலைகள் தொடங்கின. இந்த பெயிண்ட் மூன்று தேசிய ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

மத்திய அரசு அறிவிப்பு

அவை மும்பையில் உள்ள நேஷனல் டெஸ்ட் ஹவுஸ், புதுடெல்லியில் உள்ள ஸ்ரீராம் இன்ஸ்டிடியூட் ஃபார் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச், காஸியாபாத்தில் உள்ள நேஷனல் டெஸ்ட் ஹவுஸ் ஆகியவை ஆகும். இதுதொடர்பாக மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் அலுவலகம் சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


அப்போ பவர்கட் பண்ணிடுவாங்களா? ஊழியர்கள் ஸ்டிரைக் - பொதுமக்கள் அதிர்ச்சி!

BIS தரச் சான்று

அதில், காதி பெயிண்ட் ஆனது சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பை ஏற்படுத்தாது. பூஞ்சைகள், பாக்டீரியாக்களுக்கு எதிரானது. மணமற்றதாக திகழும் இந்த பெயிண்ட், மலிவு விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இது மிகவும் தரமான பெயிண்ட் என்று இந்திய தரச் சான்று கழகம் (BIS) சான்றளித்துள்ளது. இந்த காதி பிராக்ரிதிக் பெயிண்ட் ஆனது இரண்டு வகைகளில் கிடைக்கும்.

உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு

அவை டிஸ்டெம்பர் பெயிண்ட் மற்றும் பிளாஸ்டிக் எமல்ஷன் பெயிண்ட் ஆகியவை ஆகும். இதுகுறித்து KVIC கூறுகையில், வேதிக் பெயிண்ட் தயாரிப்பில் லெட், மெர்க்குரி, குரோமியம், ஆர்சீனிக், காட்மியம் உள்ளிட்ட கன உலோகங்கள் பயன்படுத்தப்படவில்லை. இந்த பெயிண்ட் தயாரிப்பானது உள்நாட்டு உற்பத்திக்கும் பெரிதும் உந்துதலாக அமையும். மேலும் உள்ளூர் மக்கள் பலருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும்.

கூடுதல் வருமானம்

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக மாட்டுச் சாணம் பெறப்படுவதால் அவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். ஒரு விவசாயிக்கு ஒரு மாட்டிற்கு ஆண்டிற்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் வருமானம் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. மாட்டுச் சாணத்தை பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காது. ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேதிக் பெயிண்டை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று அறிமுகம் செய்து வைக்கிறார்.


இணையத்தில் வெளியான மாஸ்டர்: அதிர்ச்சியில் படக்குழு!

அடுத்த செய்தி