ஆப்நகரம்

காஷ்மீர் செல்லும் 36 மத்திய அமைச்சர்கள்; எதற்காக? மோடி அப்படியென்ன அட்வைஸ் கொடுத்தார்!

36 மத்திய அமைச்சர்கள் கொண்ட குழு இன்று முதல் ஒருவாரத்திற்கு ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.

Samayam Tamil 18 Jan 2020, 10:27 am
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பல்வேறு சலுகைகளை சிறப்பு சட்டப்பிரிவு 370 அளித்து வந்தது. இதனை மோடி தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபட்டது.
Samayam Tamil Kashmir Tension


இதுதொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அரசாணை வெளியிடப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்!!

இதனால் ஜம்மு காஷ்மீரில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அம்மாநில அரசியல் தலைவர்கள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நடவடிக்கை பற்றி பல்வேறு நாடுகளும் பேசி வருகின்றன. இந்நிலையில் 36 மத்திய அமைச்சர்கள் கொண்ட குழு ஜம்மு காஷ்மீர் பகுதிகளுக்கு இன்று செல்ல இருக்கின்றது.

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

இதற்கான ஏற்பாடுகளை உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். அதாவது, நகர்ப்புற மக்களை சந்திக்கும் பயணமாக மட்டுமின்றி, கிராமப்புற மக்களையும் சந்திக்கும் பயணமாக இருக்க வேண்டும்.

இந்திய மக்களுக்கு அரசு கொண்டு வந்துள்ள வளர்ச்சி திட்டங்கள் குறித்து எடுத்துச் சொல்ல வேண்டும். குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அறிவித்துள்ள திட்டங்கள் பற்றியும் எடுத்து கூற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

இன்று தொடங்கி அடுத்த 7 நாட்கள் ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். இதைத் தொடர்ந்து வரும் 24ஆம் தேதி அமைச்சர்கள் டெல்லி திரும்புகின்றனர்.

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதில் இருந்து அந்த மக்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை சந்தித்து வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் மத்திய அமைச்சர்களின் இந்தப் பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி