ஆப்நகரம்

உன்னாவ் பாலியல் வழக்கு: ஒத்திவைக்கப்பட்டது பாஜக முன்னாள் எம்.எல்.ஏ.வின் தண்டனை அறிவிப்பு...

முன்னாள் பாஜக எம்.எல்.ஏ.வான இவரது தண்டனை விவரம், பாலியல் வழக்குகளுக்கான தீர்ப்புக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், எதிர்பாராத ​​விதமாக தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

Samayam Tamil 17 Dec 2019, 2:47 pm
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். அவருக்கான தண்டனை விவரங்கள் இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Samayam Tamil kuldeep-Singh-Sengar


இந்நிலையில் தண்டனை விவரங்கள் எதிர்வரும்.டிசம்பர் 20 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று டெல்லி சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வல்லுறவு, விபத்து, கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் இவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். நெடுநாளாக பரபரப்புக்குள்ளாகி வந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்கவேண்டும் என்று சிபிஐ தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.

உன்னாவ் பாலியல் வழக்கு: பாஜக எம்.எல்.ஏ.வுக்கு தண்டனை என்ன?

அதேசமயம் இதற்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று குல்தீப் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் பாஜக எம்.எல்.ஏ.வான இவரது தண்டனை விவரம் பாலியல் வழக்குகளுக்கான தீர்ப்புக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

அடுத்த செய்தி