ஆப்நகரம்

உன்னாவ் பாலியல் வழக்கு: எரியூட்டப்பட்ட பாதிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு

உடலில் 90 சதவீத தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்ட இளம் பெண் , லக்னோவிலுள்ள எஸ்.பி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார். பின்பு, மேல் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் புதுடெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால்...

Samayam Tamil 7 Dec 2019, 10:02 am
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண், கடந்த ஆண்டு டிசம்பரில் இரண்டு இளைஞர்கள் கடத்திச்சென்று பாலியல் வன்புணர்வு செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் வெளிவந்து உள்ளனர்.
Samayam Tamil unnao rape


இது தொடர்பான வழக்கு ரேபரேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் வந்தார். அப்போது குற்றவாளிகள் (குற்றம் சாட்டப்பட்டவர்கள் ) இருவர் மற்றும் கூடுதலாக மூன்று பேர் என ஐந்து பேர் சேர்ந்து அப்பெண்ணை வழிமறித்து அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

உடலில் 90 சதவீத தீக்காயங்களுடன் இளம் பெண் , லக்னோ எஸ்.பி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார். பின்பு, மேல் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் புதுடெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, மிகவும் மோசமான நிலையில் இருந்த பாதிக்கப்பட்ட இளம்பெண், நள்ளிரவில் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தீ வைத்த குற்றத்திற்காக , அந்த 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

பாலியல் குற்றங்களைச் செய்துவிட்டு , பாதிக்கப்பட்ட பெண்களை கொல்வது என்னும் சதைவேட்டை மனநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இதேபோல பிரமுகர்கள் பலரும் சம்பந்தப்பட்டிருந்த ஒர் பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கொல்லப்பட்டு, அந்த பெண்ணும் விபத்துக்குள்ளானது இதே உன்னாவ் மாவட்டத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

2017ம் ஆண்டு இந்தியாவில் 33 ஆயிரத்து 658 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகி உள்ளதாக அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய குற்றவியல் ஆணக்காப்பக அறிக்கை தெரிவிக்கின்றது. அதாவது, ஒவ்வொரு நாளும் 92 பாலியல் வல்லுறவுகள் சராசரியாக நடைபெறுவதை இந்த புள்ளிவிவரம் காட்டுகின்றது.

அடுத்த செய்தி