ஆப்நகரம்

காஷ்மீர் விவகாரத்தில் அடுத்த அதிரடி; ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இன்று முக்கிய ஆலோசனை!

பாகிஸ்தானின் எடுத்த அதிரடி நடவடிக்கையால் காஷ்மீர் விவகாரம், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இன்று ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Samayam Tamil 16 Aug 2019, 11:09 am
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. மேலும் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அரசாணை பிறப்பித்துள்ளது.
Samayam Tamil UNSC Meeting


இதற்கு பாகிஸ்தான் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்ள முன்வந்தது. முதலில் வர்த்தகப் போக்குவரத்திற்கு தடை விதித்தது.

Also Read: வாஜ்பாய் முதலாண்டு நினைவு தினம்- குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் அஞ்சலி!

பின்னர் இந்தியா உடனான ரயில், பேருந்து போக்குவரத்தையும் துண்டித்துக் கொண்டது. காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் ஆதரவைப் பெற, அந்நாட்டிற்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி சென்றார்.

இதையடுத்து பாகிஸ்தானின் நிலைப்பாட்டிற்கு சீனாவும் ஆதரவு அளித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தலைவர் ஜோயன்னா ரானெக்காவிற்கு குரேஷி கடிதம் ஒன்றை எழுதினார்.

Also Read: சுங்கச்சாவடிகளில் நடக்கும் சிரமங்களை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை..!

அதில், காஷ்மீரில் நடந்து வரும் அதிரடியான மாற்றங்கள் குறித்து விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை அவசரமாக கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்த கோரிக்கையை சீனாவும் ஆதரித்தது.

இதையடுத்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் சீனா, அதன் தலைவரை அணுகி உடனடியாக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வலியுறுத்தியது.

Also Read: இந்தியாவின் பாரம்பரியங்களை பிரதிபலித்த கூகுள் டூடுல்!

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுவதாக அதன் தலைவர் ஜோயன்னா ரானெக்கா அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி