ஆப்நகரம்

உ.பி.-யில் வறட்சிக்கு 10 கோடி பேர் பாதிப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வறட்சிக்கு சுமார் 10 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

TOI Contributor 20 Apr 2016, 3:37 pm
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் வறட்சிக்கு சுமார் 10 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil up alone affected 10 crore people for drought
உ.பி.-யில் வறட்சிக்கு 10 கோடி பேர் பாதிப்பு


அதன்படி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் 75 மாவட்டங்களில் 50 மாவட்டங்கள் வறட்சி பதிப்பு மாவட்டங்களாகும். அதனால், 9.9 கோடி மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் 51 மாவட்டங்களில் 46 மாவட்டங்கள் வறட்சி பதிப்பு மாவட்டங்களாகும். அதனால், 4.0 கோடி மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் 36 மாவட்டங்களில் 21 மாவட்டங்கள் வறட்சி பதிப்பு மாவட்டங்களாகும். இந்த வறட்சியால் சுமார் 3.7 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் 24 மாவட்டங்களில் 22 மாவட்டங்கள் வறட்சி பதிப்பு மாவட்டங்களாகும். இந்த வறட்சியால் சுமார் 3.2 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர்.

அதேபோல் தென் மாநிலமான கர்நாடகத்தில் 30 மாவட்டங்களில் 27 மாவட்டங்கள் வறட்சி பதிப்பு மாவட்டங்களாகும். இந்த வறட்சியால் சுமார் 3.1 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர்.

அடுத்த செய்தி