ஆப்நகரம்

உத்தரபிரதேச மூன்றாம் கட்ட தேர்தலில் 61.16 சதவீதம் வாக்குப்பதிவு!

உத்தரபிரதேச மூன்றாம் கட்ட தேர்தலில் 61.16 சதவீதம் வாக்குப்பதிவு!

TOI Contributor 19 Feb 2017, 8:54 pm
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் இன்று மூன்றாவது கட்ட தேர்தல் நடந்தது. 12 மாவட்டங்களை கொண்ட 69 தொகுதிகளில் இன்று மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. 25, 603 வாக்குச்சாவடிகளிலிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் சுமார் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தல் ஆணையர் வெங்கடேஷ் கூறியிருக்கிறார்.
Samayam Tamil up assembly election 61 16 voter turnout in phase 3
உத்தரபிரதேச மூன்றாம் கட்ட தேர்தலில் 61.16 சதவீதம் வாக்குப்பதிவு!


முதல் கட்ட தேர்தலில் 64.2 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 65 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. உத்தர பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் வாக்களித்தனர். வாக்களித்த பின்பு பேசிய மாயாவதி 403 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சி 300 இடங்களில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். சமாஜ்வாதி கட்சியின் ஆட்சியால் மக்கள் மிகுந்த ஏமாற்றாத்துடனும், வேதனையுடன் இருப்பதாகவும் மாயாவதி தெரிவித்துள்ளார்.

வாக்களித்த பின் கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெரும் என்று கூறினார். காலையில் மிகவும் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு பின்னர் ஓரளவுக்கு விறுவிறுப்படைந்தது.

அடுத்த செய்தி