ஆப்நகரம்

உத்தரபிரதேச மாநிலம் : நான்காம் கட்ட தேர்தலில் 61 சதவீதம் வாக்குப்பதிவு!

உத்தரபிரதேச மாநிலம் : நான்காம் கட்ட தேர்தலில் 61 சதவீதம் வாக்குப்பதிவு!

TNN 23 Feb 2017, 10:54 pm
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் இன்று நான்காவது கட்ட தேர்தல் நடந்தது. 12 மாவட்டங்களை கொண்ட 53 தொகுதிகளில் இன்று நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்றது. 62 பெண்கள் உட்பட 680 பேர் போட்டியிடுகின்றனர். மாலை 5 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் சுமார் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. முதல் கட்ட தேர்தலில் 64.2 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 65 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. மூன்றாம் கட்ட தேர்தலில் 61.16 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
Samayam Tamil up assembly election 61 per cent voter turnout in phase 4
உத்தரபிரதேச மாநிலம் : நான்காம் கட்ட தேர்தலில் 61 சதவீதம் வாக்குப்பதிவு!


பெரும்பாலான இடங்களில்அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அத்ஹரியா கிராமத்தில் பிஜேபி தொண்டர்கள் மீது ஆளும் சமாஜ்வாதி கட்சியினர் கல்வீசி தாக்கிதாக புகார் எழுந்தது. ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அது குறித்து யாரும் கைது செய்யப்படவில்லை. எனினும் அப்பகுதிக்கு கூடுதலாக காவலர்களை அனுப்பியதாக அலகாபாத் காவல் துறை கண்காணிப்பாளர் ஷலப் மாதுர் தெரிவித்துள்ளார்.

சங்கர்கர் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த வாக்காளர்களை பாதுகாவலர்கள் தாக்கியதாக புகார் எழுந்தது. இதனால் தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் கூறிய நிலையில், தேர்தல் அதிகாரிகள் சமாதானப்படுத்தி வாக்களிக்க வைத்தனர். அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி போஷ்லே, மேற்கு வங்க கவர்னர் கேஸ்ரி நாத் திரிபாதி, உத்தரபிரதேச மாநிலம் பிஜேபி தலைவர் கேஷவ் பிரசாத் மௌரியா மற்றும் பிஜேபியின் தேசிய செயலாளர் சித்தார்த் நாத் சிங் ஆகியோர் வாக்களித்தனர்.

அடுத்த செய்தி