ஆப்நகரம்

ஐஏஎஸ் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் உ.பி., முதல்வர் யோகி- ஏன் தெரியுமா!

தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறார்.

Samayam Tamil 1 Jul 2019, 1:32 pm
உத்தரப்பிரதேச மாநிலத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் சிறப்பு செயலாளராக, கவுன்சில் இயக்குநராக இருந்தவர் தினேஷ் குமார். இவர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2014ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர்.
Samayam Tamil Yogi.


தனது துறையில் தேவையற்ற செலவுகளைக் குறித்து, உத்தரப் பிரதேச மாநில அரசிற்கு வருவாய் ஈட்டித் தந்துள்ளார். இதனை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெகுவாக பாராட்டினார்.

இதன் தொடர்ச்சியாக கோரக்பூர் வளர்ச்சி ஆணையத்தின் உபதலைவராக அமர்த்தப்பட்டுள்ளார். இது முதல்வர் யோகியின் சொந்த மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அதிகாரிகளின் திறமை மீது யோகிக்கு தனிமதிப்பு உண்டு.

தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 14 ஐஏஎஸ், 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழர்கள் சிறப்பான செயல்பாட்டின் காரணமாகவே, தனது சொந்த மாவட்டத்தில் ஐஏஎஸ் தமிழனுக்கு உயர் அதிகாரி பொறுப்பு வழங்கியுள்ளார்.

இதேபோல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விஜயேந்திர பாண்டியன் என்ற ஐஏஎஸ் அதிகாரியை, கோரக்பூர் மாவட்ட ஆட்சியராக யோகி நியமித்திருந்தார். இவர் 2008ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்தவர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்களாக இரு தமிழர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அவர்கள் பரேலி - ஜி.முனிராஜ், புலந்த்ஷெஹர் - என்.கொளஞ்சி ஆவர். கிரிமினல் நடவடிக்கைகள் அதிகம் உள்ள இந்த மாவட்டங்களில், தமிழக அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி