ஆப்நகரம்

வாழ்க்கைக்கு ஒரு உதவித்தொகை, வழக்குக்கு ஒரு உதவித்தொகை : முத்தலாக் பெண்களுக்கு யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

முத்தலாக் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதம் 6000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Sep 2019, 7:57 am
லக்னோ: முத்தலாக் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதம் 6000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil download


இஸ்லாமிய சட்டங்களில் ஒன்றான முத்தலாக் நடைமுறையை தடை செய்யும் மசோதா, அண்மையில் பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பின், குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் சட்டமானது.

இஸ்லாமியர்களின் தரப்பில், இதற்கு பலத்த எதிர்ப்பு இருந்த போதும், பாராளுமன்ற பெரும்பான்மையின் மூலம் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், நேற்று (25.09.2019) உத்தரப்பிரதேசத்தில், பெண்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது , அங்கு கலந்து கொண்ட இஸ்லாமிய பெண்களின் குறைகளை கேட்டறிந்தார்.

பின்பு, முத்தலாக் நடைமுறையால், பாதிக்கப்பட்டு வாழும் இஸ்லாமியப்பெண்களுக்கு மாதம் 6000 ரூ, உதவித்தொகையும், வழக்கை நடத்துவதற்கான உதவித்தொகையும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், படித்த பெண்களுக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்...

அடுத்த செய்தி