ஆப்நகரம்

உ.பி. போலீசார் விஷம் குடித்து 4 நாட்களுக்குப் பின் மரணம்!

உத்தரப் பிரதேசம் கான்பூர் நகர போலீஸ் அதிகாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

Samayam Tamil 9 Sep 2018, 10:44 pm
உத்தரப் பிரதேசம் கான்பூர் நகர போலீஸ் அதிகாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
Samayam Tamil _0e99153a-b415-11e8-bb15-a1f88311a832


உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கான்பூர் நகர காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் சுரேந்திர குமார் தாஸ். 30 வயதான இவர் விஷம் குடித்த நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அம்மாநில போலீசார் அவருக்கு அளிக்கும் சிகிச்சையை கண்காணித்து வந்தனர். சுரேந்திர குமாரின் பல உடல் உறுப்புகள் சரியாக செயல்படாத நிலை உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி