ஆப்நகரம்

மக்கள் பணத்தை ஆட்டைய போடத்தான் அரசியலுக்கு வந்தேன் - வேட்பாளர் தெனாவட்டு

உத்தர பிரதேசம் மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதே என் நோக்கம் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

TNN 28 Jan 2017, 3:23 pm
லக்னோ : உத்தர பிரதேசம் மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதே என் நோக்கம் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
Samayam Tamil up election candidate makes shocking revelation i only want to earn money
மக்கள் பணத்தை ஆட்டைய போடத்தான் அரசியலுக்கு வந்தேன் - வேட்பாளர் தெனாவட்டு


உ.பி.,யில் சட்ட மன்ற தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதில் காங்கிரஸ் - சமாஜ்வாடி கட்சியும், பாஜக., தனியாகவும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றொரு அணியாகவும் தேர்தலை சந்திக்கின்றது.

இந்த தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கோபால் சவுத்ரி என்பவர் பரபரப்பாக பேசி பிரச்சாரம் செய்துள்ளார்.

அதில், “அரசியலுக்கு வந்தால் எளிதாக அதிக பணம் சம்பாதிக்க முடியும். வீடு கட்ட முடியும். இதனால் தான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். நான் அரசியலுக்கு புதிது என்பதால் நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அரசு அதிகாரிகள் மக்கள் பணத்தை எப்படி கொள்ளையடிப்பது, அவர்களை எப்படி ஏமாற்றுவது என கற்றுத் தர வேண்டும் என வெளிப்படையாக கேட்டுள்ளார்.

SP candidate for upcoming UttarPradesh elections explaining how he is going to make money for himself and the party if he get elected as MLA pic.twitter.com/kiDfrn0PFJ — Rishi Bagree (@rishibagree) January 28, 2017

பிரதமர் மோடி 125 கோடி பேரை ஏமாற்றி வருகின்றார். மக்களை ஏமாற்ற தனி திறமை வேண்டும். அவரைப் போல மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற யோசித்து வருகின்றேன்.” என கூறியுள்ளார்.

இவரின் பேட்டி அங்குள்ள டி.என்.எஸ் சேனலில் ஒளிபரப்பாகியுள்ளது.

அடுத்த செய்தி