ஆப்நகரம்

முத்தலாக் மசோதா: யோகி அரசு உடனடி ஒப்புதல்

இஸ்லாமிய மத வழக்கப்படி முத்தாலக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் ஆணுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கும் மத்திய அரசின் சட்ட மசோதாவுக்கு உத்தரப் பிரதேச அரசு ஒப்பதல் அளித்துள்ளது.

TNN 7 Dec 2017, 1:41 pm
இஸ்லாமிய மத வழக்கப்படி முத்தாலக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் ஆணுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கும் மத்திய அரசின் சட்ட மசோதாவுக்கு உத்தரப் பிரதேச அரசு ஒப்பதல் அளித்துள்ளது.
Samayam Tamil up first state to endorse centres triple talaq draft bill
முத்தலாக் மசோதா: யோகி அரசு உடனடி ஒப்புதல்


முன்று முறை தலாக் என்ற சொல்லைக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் முறை இஸ்லாமியர்களிடையே வழக்கத்தில உள்ளது. இதனை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், டி.ஒய். சந்திரசூட், எஸ்.எகே. கவுல் உள்ளிட்டோர் கொண்ட ஐவர் அமர்வில் விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி முத்தலாக் தொடர்பாக புதிய சட்டத்தை இயற்றப்போவதாத் தெரிவித்தார்.

இதன்படி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் குழு "இஸ்லாமியப் பெண்கள் திருமணப் பாதுகாப்பு மசோதா" என்ற பெயரில் புதிய சட்ட முன்வரைவை உருவாக்கியுள்ளது.

நேரிலோ, இ-மெயில், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்அப் போன்ற வேறு எந்த தொடர்பு சாதனங்கள் வழியாகவோ முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தால், அந்த விவாகரத்து செல்லாது. மேலும் அந்த கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும். என்று இந்த சட்ட முன்வரவு கூறுகிறது. இதனை மாநில அரசுகளின் ஒப்பதலுக்கு மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி அனுப்பியது. இதற்கு முதலாவதாக உத்தரப் பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

வரும் டிசம்பர் 15 முதல் ஜனவரி 5 வரை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் முத்தலாக் தொடர்பான சட்ட மசோதா பற்றி விவாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

அடுத்த செய்தி