ஆப்நகரம்

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 1000 பஸ்கள்: பிரியங்காவுக்கு அனுமதி!!

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஆயிரம் பஸ்களை இயக்குவதற்கு உத்தரப்பிரதேசத்திற்கான காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு உத்தரப்பிரதேச அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Samayam Tamil 18 May 2020, 6:24 pm
உத்தரப்பிரதேசத்தில் சிக்கி இருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆயிரம் பஸ்களை இயக்குவதற்கு அனுமதி கோரி உத்தரப்பிரதேசத்திற்கான காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விண்ணப்பித்து இருந்தார்.
Samayam Tamil பிரியங்கா காந்தி


துவக்கத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது என்ற செய்தி வெளியாகி இருந்தது. இறுதியில் ஆயிரம் பஸ்களை இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக உத்தரப்பிரதேச கூடுதல் தலைமை செயலாளர் (உள்துறை) அவனிஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார்.

உடனடியாக பஸ் குறித்த தகவல்கள், ஓட்டுநர்கள் பெயர்களை வழங்குமாறு பிரியங்காவிடம் மாநில அரசு கேட்டுள்ளது. அனுமதி கோரி கடந்த சனிக்கிழமை பிரியங்கா மாநில அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

முடி வெட்டலாம் ஆனால் ஷேவிங் கிடையாது..!

அந்தக் கடிதத்தில், ''காசியாபாத், நொய்டாவில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ஆயிரம் பஸ்களுக்கான அனைத்து செலவுகளையும் காங்கிரஸ் கட்சி ஏற்கும்'' என்று தெரிவித்து இருந்தார்.
இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளா, புதுச்சேரி; பேருந்துகளை இயக்க முடிவு!
பிரியங்கா காந்தி விண்ணப்பித்து இருந்த அன்றுதான் 24 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழந்தனர். மேலும் தனது கடிதத்தில், ''உத்தரப்பிரதேசத்தில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் செல்கின்றனர். அவர்கள் பாதுகாப்பாக வீடு சென்றடைவதற்கு போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. காசியாபாத்தில் இருந்து 500 பஸ்கள், நொய்டாவில் இருந்து 500 பஸ்கள் காங்கிரஸ் சார்பில் இயக்கப்படும்'' என்று பிரியங்கா தெரிவித்து இருந்தார்.

அடுத்த செய்தி