ஆப்நகரம்

ஹத்ராஸ் வன்கொடுமை: சிபிஐ விசாரணை கோரி பிரமாணப் பத்திரம் - உ.பி அரசு!

இளம் தலித் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் உச்ச நீதிமன்றத்தில் முக்கிய கோரிக்கையை உ.பி மாநில அரசு முன்வைத்துள்ளது.

Samayam Tamil 6 Oct 2020, 12:45 pm
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான இளம் பெண், நான்கு பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார். அதன்பின்னர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச மாநில அரசு பிரமாணப் பத்திரம் இன்று தாக்கல் செய்துள்ளது.
Samayam Tamil Supreme Court


அதில் தற்போது வரை நடைபெற்ற வழக்கு விசாரணை தொடர்பான விவரங்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. மேலும் மாநில அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களிலும், டிவி, செய்தித்தாள்களிலும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. எனவே மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிப்பதே சரியாக இருக்கும். இந்த விவகாரத்தை சிபிஐ கையாள வேண்டும் என்று ஏற்கனவே மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.

அடுத்தடுத்து அரங்கேறும் பரபரப்பு; ஹத்ராஸ் சம்பவத்தின் லேட்டஸ்ட் ரிப்போர்ட்!

மேலும் சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்புணர்வு சம்பவம் தொடர்பான விசாரணையில் காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடு, பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை ஆகியவை தொடர்பாக விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த சூழலில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உத்தரப்பிரதேச மாநில அரசு கோரியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

அடுத்த செய்தி