ஆப்நகரம்

குடிக்க பணம் தராததால அண்ணன் மூக்கை கடித்து துப்பியவர் கைது!

உத்தரப்பிரதேசத்தில் குடிக்க பணம் தர மறுத்ததால் அண்ணின் மூக்கை கடித்து துப்பிய ஸ்ரீிகாந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 6 Apr 2018, 12:12 pm
உத்தரப்பிரதேசத்தில் குடிக்க பணம் தர மறுத்ததால் அண்ணின் மூக்கை கடித்து துப்பிய ஸ்ரீிகாந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil brother-bites-off-nose_650x400_51522982208


உத்தரப்பிரதேச மாநிலம் கன்னூஜ் நகரில் வசித்து வருபவர் சோப்ரான். இவரது தம்பி ஸ்ரீகாந்த். இந்நிலையில், ஸ்ரீகாந்த் குடிப்பதற்கு அடிக்கடி அண்ணனிடம் பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, நேற்று ஸ்ரீகாந்த் தனது அண்ணனிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அப்போது, அண்ணன் மறுக்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த், கோபத்தில், அண்ணன் சோப்ரானின் மூக்கை கடித்து துப்பியுள்ளார்.

மேலும், இவரை தடுக்க வந்த குடும்பத்தினரையும் சாராமாரியாக தாக்கியுள்ளார். பின்னர, தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஸ்ரீகாந்தை கைது செய்து கொண்டு சென்றனர். அண்ணன் சோப்ரான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி