ஆப்நகரம்

ரயிலில் பயணம் செய்த பயணியை பாம்பு கடித்ததால் பரபரப்பு!

கான்பூர்: சங்கம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற பயணியை பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 1 Oct 2018, 3:06 pm
சங்கம் எக்ஸ்பிரஸ் ரயிலில் மீரட்டில் திருப்பதி என்ற பயணி ஏறினார். இந்நிலையில் ரயிலில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. அதே ரயிலில் பாம்பாட்டி ஒருவர் தனது பாம்புடன் அதே ரயிலில் பயணித்தார்.
Samayam Tamil 4


இந்நிலையில் அந்த பாம்பாட்டி ரயிலின் உள்ளேயே, பாம்பை வைத்து வித்தை காட்டியபடி வந்தார். இந்நிலையில் ரயில் கான்பூர் மத்திய ரயில் நிலையம் அருகே வந்த போது, திருப்பதி தன்னை பாம்பு கடித்துவிட்டதாக அலறினார்.

இதைப்பார்த்த அந்த பாம்பாட்டி, அது விஷத்தன்மை இல்லாத பாம்பு என்ற கூறி பயப்பட வேண்டாம் என தெரிவித்தார், ஆனால் இதை கேட்காத சக பயணிகள் அவரை அடித்து கான்பூர் மத்திய ரயில் நிலைத்தில் உள்ள ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து பாம்பு கடித்த திருப்பதிக்கு, மருத்துவர்கள் முதலுதவி செய்து, பாம்பு விஷத்தன்மை இல்லாததது என்பதை உறுதி செய்து திருப்பதியை அனுப்பினர். கைது செய்யப்பட்ட பாம்பாட்டியிடமிருந்து பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின் பாம்பாட்டி வனவிலங்குகளின் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

அடுத்த செய்தி