ஆப்நகரம்

அயோத்தியில் மசூதி கட்டத் தயாராகும் வக்ஃபு வாரியம்

15 பேர் கொண்ட இந்த அமைப்புக்கு இந்தோ இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Jul 2020, 7:46 pm
இந்தியாவின் நெடுங்கால அரசியல் பிரச்சினைகளில் ஒன்றான ராம ஜென்ம பூமி வழக்கில் 2019ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. அதன்படி, சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் இந்துக்கள் கோயில் கட்டிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
Samayam Tamil ram mandhir


அதே சமயம், இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ள, 5 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை அவர்கள் விரும்பிய இடத்தில் அரசே வழங்க வேண்டும் என்று தீர்ப்பு தெரிவித்தது.

தீர்ப்பின்படி, ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை உருவாக்கப்பட்டு , மர் கோயிலுக்கான மாதிரி தயார் செய்யப்பட்டு, வேலைகள் மும்முரமாக நடந்து வந்தன. கொரோனாவால் பணிகள் தாமதமானதை அடுத்து எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி, அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்கு பிரதமர் நரேந்திரமோடி சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டுள்ளார்.

அயோத்தி ராமர் கோயில்: உலகிலேயே மூன்றாவது பெரிய கோயிலாக வாய்ப்பு

இந்நிலையில், அயோத்தியில் மசூதிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டுவதற்கான அமைப்பை உத்தரப் பிரதேச மாநில வக்ஃபு வாரியம் அமைத்துள்ளது. 15 பேர் கொண்ட இந்த அமைப்புக்கு இந்தோ இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.


பாபர் மசூதி இடிப்பு வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், ராமஜென்ம பூமி நிலத்தகராறு வழக்கு மட்டும் தீர்த்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி