ஆப்நகரம்

3 வயது சிறுமி வாயில் பட்டாசு வெடித்த இளைஞர்- உ.,பி-யில் அதிர்ச்சி..!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது 3 வயது சிறுமி வாயில் இளைஞர் பட்டாசு வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 8 Nov 2018, 2:40 pm
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது 3 வயது சிறுமி வாயில் இளைஞர் பட்டாசு வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil crackers_0
சிறுமி வாயில் பட்டாசு வெடித்த இளைஞர்- உ.பி-யில் அதிர்ச்சி..!!


வடமாநிலங்களில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் உள்ள மிலாக் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். அவருடைய 3 வயது மகள் தவுராலா.

அங்கு சாலையில் பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்க்க சென்றுள்ளாள் சிறுமி தவுராலா. அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த ஹர்பால் என்ற இளைஞர் சிறுமியை அழைத்து 'சுட்லி' பட்டாசை வாயில் வைத்து வெடித்துள்ளார்.

இதனால் சிறுமிக்கு வாயில் ரத்தம் கொட்டியது. இதையடுத்து, சிறுமியின் தந்தை சசிகுமார் சிறுமி தவுராலாவை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். சிறுமிக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரின் வாயில் 50க்கும் மேற்பட்ட தையல்கள் போட்டுள்ளனர்.

எனினும், சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் தந்தை சசிகுமார் இந்த சம்பவம் தொடர்பாக மீரட் நகர போலீசாரிடம் புகார் அளித்தார்.

புகார் பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹர்பாலை தேடி வருகின்றனர். ஹர்பால் தலைமறைவாக இருப்பதால், அவரைக் கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி