ஆப்நகரம்

அப்படியென்ன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன?- டெல்லியில் ட்ரம்ப், மோடி இன்று பேச்சுவார்த்தை!

டெல்லியில் இந்தியா - அமெரிக்கா இடையில் இன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 25 Feb 2020, 7:56 am
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக திகழும் அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று நண்பகல் அகமதாபாத் விமான நிலையம் வந்த ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ட்ரம்பை பிரதமர் மோடி வரவேற்றார். இதையடுத்து சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் உலகின் மிகப்பெரிய விளையாட்டு மைதானமான மோதிராவிற்கு சென்று “நமஸ்தே ட்ரம்ப்” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Samayam Tamil Modi


இதில் இரு தலைவர்களும் உரையாற்றினர். அப்போது 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்திடப்படும் என்று ட்ரம்ப் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சி நிறைவடைந்த பின் ட்ரம்ப் ஆக்ரா புறப்பட்டுச் சென்றார்.

அங்கு தனது மெலானியா உடன் உலக அதிசயமான தாஜ்மஹாலை கண்டு ரசித்தார். அதன் பிறகு விமானம் மூலம் டெல்லி சென்று மௌரியா நட்சத்திர விடுதியில் இரவு தங்கியுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் முப்படைகளின் அணிவகுப்பை ட்ரம்ப் ஏற்கிறார். இதையடுத்து 10.30 மணிக்கு ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

ட்ரம்ப், மெலானியாவை உருகவைத்த தாஜ்மஹால்!!

நண்பகல் 12 மணியளவில் டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் வர்த்தக ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகாது என்று கூறப்படுகிறது. ஏனெனில் இந்தியா வந்துள்ள அமெரிக்கா அதிகாரிகளில் வர்த்தகத்துறை பிரநிதியான ராபர்ட் லைட்திசர் என்பவர் இடம்பெறவில்லை. அவர் இல்லாமல் வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திடாது என்று கூறப்படுகிறது.

அதேசமயம் பாதுகாப்புத்துறை சார்ந்த ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாக வாய்ப்புள்ளது. இந்திய கடற்படைக்கு நவீன ரக ஹெலிகாப்டர்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தமும், எரிசக்தி துறையில் சில ஒப்பந்தங்களும் கையெழுத்தாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

அடுத்த செய்தி