ஆப்நகரம்

​ தாழ்த்தப்பட்டவா்களை சாதிரீதியில் திட்டினால் சிறை – நீதிமன்றம் எச்சாிக்கை

சாதிரீதியான மோசமான கருத்துகளை பொது இடங்களில் செல்போனில் தொிவித்தாலும் அது தண்டனைக்குாிய குற்றமே என்று உச்சநீதிமன்றம் தொிவித்துள்ளது.

TOI Contributor 19 Nov 2017, 4:35 pm
சாதிரீதியான மோசமான கருத்துகளை பொது இடங்களில் செல்போனில் தொிவித்தாலும் அது தண்டனைக்குாிய குற்றமே என்று உச்சநீதிமன்றம் தொிவித்துள்ளது.
Samayam Tamil using castiest remarks over phone in public an offence supreme court
​ தாழ்த்தப்பட்டவா்களை சாதிரீதியில் திட்டினால் சிறை – நீதிமன்றம் எச்சாிக்கை


உத்திரபிரதேசத்தில் பட்டியலினத்தைச் சோ்ந்த பெண் ஒருவரை செல்போனில் சாதிரீதியாக மோசமான கருத்துகளை தொிவித்ததாக காவல் நிலையயத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அந்த புகாா் மீதான குற்றப்பத்திாிகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவா் தரப்பில் அரகலபாத் உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உயா்நீதிமன்றம் அந்த புகாரை தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டது.

இதனை எதிா்த்து அந்த நபா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். நீதிபதிகள் செலமேஸ்வர் மற்றும் அப்துல் நாசர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான விவேக் விஷ்னோய் என்ற வழக்கறிஞர், சம்பவம் நடைபெற்றபோது புகார் அளித்த பெண்ணும், தனது கட்சிக்காரரும் வெவ்வேறு இடங்களில் இருந்ததாகவும், போன் மூலமே பேசிக்கொண்டதாகவும் வாதாடினார்.

அதனால், அவர் மீது பதிவுசெய்யப்பட்ட முதல் தகவலறிக்கையை ரத்து செய்யவேண்டும் என்று வாதடினார். ஆனால், அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று மறுப்புத் தெரிவித்த நீதிபதிகள், சாதிரீதியாக மோசமான கருத்துகளைப் போனில் தெரிவித்தாலும் குற்றமே என்று உத்தரவிட்டனர்.

மேலும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சோ்ந்தவா்களை சாதிரீதியாக திட்டுவது தண்டனைக்குாிய குற்றமே என்று கருத்து தொிவித்தனா். தொடா்ந்து இவ்வாறு பேசுபவா்கள் மீது வழக்கு பதிவு செய்து 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.

அடுத்த செய்தி