ஆப்நகரம்

ராமாயணம் மியூசியம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு!

ராமாயணம் மியூசியம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு!

Times Now 21 Mar 2017, 3:48 pm
உத்தரபிரதேசத்தில் ராமாயணம் மியூசியம் அமைக்க 20 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil uttar pradesh cm yogi adityanath clears 20 acres of land for ramayana museum in ayodhya
ராமாயணம் மியூசியம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு!


இந்த நிலைத்தை கலாச்சார அமைச்சகம் தேர்வு செய்ததை அடுத்து, அதற்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். இன்னும் 7 முதல் 10 நாட்களில் சட்டரீதியிலான நடைமுறைகள் முடிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின்பு பணிகள் தொடங்கப்பட்டு 18 மாதங்களில் மியூசியத்தின் பணிகளை முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பு இருந்த அகிலேஷ் யாதவ் அரசு ராமாயணம் மியூசியம் அமைக்க அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா அயோத்தியாவுக்கு சென்று இடங்களை பார்வையிட்டு, ராமாயனம் மியூசியம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்தார். பார்வையாளர்களை கவரும் வகையில் நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு மியூசியம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் மகேஷ் ஷர்மா கூறியுள்ளார். தேர்தலின் போது சமாஜ்வாதி கட்சி அயோத்தியில் ராம்லீலா பூங்கா அமைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்ததை அடுத்து பாஜக தற்போது இந்த திட்டத்தை அறிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் அயோத்தி கோவில் பிரச்னை உணர்வுபூர்வமானது என்றும், அதனால் அனைத்து கட்சிகளும் கவனமுடன் கையாள வேண்டு்ம் என்றும் கூறியுள்ளது.

அடுத்த செய்தி