ஆப்நகரம்

சட்டத்தை கையில் எடுத்தால் உள்ள தூக்கி போட்றுவேன்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

சட்டத்தை கையில் எடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

TNN 30 Apr 2017, 12:37 pm
லக்னோ: சட்டத்தை கையில் எடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil uttar pradesh cm yogi adityanaths veiled attack on gau rakshaks
சட்டத்தை கையில் எடுத்தால் உள்ள தூக்கி போட்றுவேன்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை


உத்தரப்பிரதேச மாநில முதலமச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு, பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் கோரக்பூரில் பேசிய அவர், பசு பாதுகாவலர்கள், ஆன்டி ரோமியா படைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சமீபத்தில் இறைச்சி கூடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது வன்முறையில் முடிந்தது. அந்த சம்பவத்திற்கு யோகி கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் சட்டத்தை கையில் எடுப்பவர்கள் தப்ப முடியாது என்றும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

சட்டம், ஒழுங்கு விவகாரத்தில் எந்த ஒரு சமரசமும் கிடையாது என்றும், சட்டத்தை மீறுபவர்கள் தப்ப முடியாது என்றும் தெரிவித்தார். ஆளும் பாஜக தலைமையிலான அரசு விரைவில் 24 மணி நேரமும் மின்சாரம், தரமான சாலைகள் வழங்கும் என்று கூறினார். விவசாயிகள் தற்கொலை உத்தரப் பிரதேச மாநிலத்தில் அறவே இருக்காது என்றும் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டார்.

Uttar Pradesh CM Yogi Adityanath's veiled attack on gau rakshaks: Violators of law will not be spared.

அடுத்த செய்தி