ஆப்நகரம்

கங்கை நதிக்கரையில் பிணங்கள்.. மீண்டும் ஒரு அதிர்ச்சி!

கங்கை நதிக்கரையில் பல பிணங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Samayam Tamil 12 May 2021, 11:30 pm

ஹைலைட்ஸ்:

  • கங்கை நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்
  • அதிகாரிகள் தீவிர விசாரணை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil bodies near ganga river in unnao
சில தினங்களுக்கு முன் பீஹார் மாநிலத்தில் கங்கை நதியில் பல சடலங்கள் மிதந்து வருவது கண்டறியப்பட்டது. இவ்விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சடலங்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து அடித்து வரப்பட்டவை என பீஹார் அரசு தெரிவித்தது. மொத்தம் 71 சடலங்கள் மீட்கப்பட்டன. அவற்றுக்கு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கங்கை நதி அருகே பல சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பெரும்பாலான சடலங்கள் காவி உடையில் மூடப்பட்டுள்ளது தெரிகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரவீந்திர குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சம்பந்தப்பட்ட இடம் முக்கியமான தகன ஸ்தலம். புதைக்கப்பட்டுள்ளவர்கள் கொரோனா நோயாளிகள் என உறுதியாகவில்லை. ஆற்றுக்கு அருகே தகனம் செய்யாமல் சிலர் புதைத்துவிடுகின்றனர்.

அடுத்த உயிர்க்கொல்லி நோய் அவதாரம்.. இந்தியாவுக்கு இன்னொரு ஆபத்து!
சம்பந்தப்பட்ட இடத்துக்கு அதிகாரிகளை அனுப்பியுள்ளோம். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். தகனம் செய்ய தேவையான மரக் கட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி