ஆப்நகரம்

அயோத்தியில் மசூதி கட்ட நெடுஞ்சாலைக்கு அருகே இடம் தேர்வு

சன்னி வக்பு வாரியம் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் மாற்று நிலத்தை ஏற்கலாமா வேண்டாமா என்பது குறித்து உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை.

Samayam Tamil 31 Dec 2019, 5:42 pm
உத்தர பிரதேச அரசு அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக 5 காலி இடங்களை அடையாளம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil adityanath


கடந்த நவம்பர் 9ஆம் தேதி அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதிக்கப்பட்டது. சட்டவிரோதமாக இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு மாற்றாக அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தில் மசூதி கட்டிக்கொள்ளலாம் எனவும் வக்பு வாரியம் ஏற்கும் நிலத்தை உ.பி. அரசு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது.

இதனையடுத்து, உத்தரப் பிரதேச அரசு சார்பில் மிர்சாபூர், சம்சுதின்பூர், சாந்த்பூர் ஆகிய பகுதிகளில் ஐந்து காலி இடங்கள் மசூதி கட்டுவதற்கான இடங்களாக தேர்வாகியுள்ளன.

போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு போலீசார் போனில் மிரட்டல்?

அயோத்தி யாத்திரை செல்லும் இந்துக்கள் பயணிக்கும் 15 கிலோ மீட்டர் தொலைவுள்ள பாதைக்கு வெளியே இந்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.

உ.பி. அரசு இதனை மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஐந்து இடங்களும் நெடுஞ்சாலைக்கு அருகில் இருப்பதால் இஸ்லாமியர்கள் எளிதாக வந்துசெல்ல வசதியாக இருக்கும் என உ.பி. அரசு தரப்பு கருதுகிறது.

அயோத்தி - பைசாபாத் சாலை, அயோத்தி - பஸ்தி சாலை, அயோத்தி - சுல்தான்பூர் சாலை மற்றும் அயோத்தி - கோரக்பூர் சாலை ஆகியவை ஆகியவை உ.பி. அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ம.பி.யில் 25% நிலப்பரப்பில் காடுகள் உள்ளன: சுற்றுச்சூழல் அமைச்சகம்

சன்னி வக்பு வாரியம் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் மாற்று நிலத்தை ஏற்கலாமா வேண்டாமா என்பது குறித்து உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. சில இஸ்லாமிய அமைப்புகள் மாற்று நிலத்தை ஏற்க முடியாது என திட்டவட்டமாக மறுத்திருக்கின்றன.

மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் பரிந்துரை, மாநில அரசு சார்பில் பைசாபாத் மாவட்ட நிர்வாகத்தால் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது என் அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறை எண் 602ல் நீடிக்கும் மர்மம்; இம்முறை கிரேட் எஸ்கேப் ஆகிறாரா அஜித் பவார்?

அடுத்த செய்தி