ஆப்நகரம்

டெல்லியில் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்- அதிரடியான ஏற்பாடுகள் செய்யும் உ.பி!

ஊரடங்கு உத்தரவிற்கு இடையில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது அக்கறை செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Mar 2020, 7:56 am
டெல்லியின் ஆனந்த் விஹார் பகுதியில் இருந்து தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வர உத்தரப் பிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்து அனுப்பியுள்ளது. எனவே டெல்லியில் எந்தப் பகுதியில் இருக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் அல்லது தொழிலாளர்கள் உடனே ஆனந்த் விஹார் பகுதிக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Samayam Tamil உ.பி சிறப்பு பேருந்துகள்


இதுதொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், டெல்லியில் சிக்கித் தவிக்கும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எந்தவொரு நபரோ அல்லது புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பும் வகையில் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான சிறப்பு பேருந்து வசதிகளைப் பெறுவதற்கு 011-26110151 அல்லது 011-26110155 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். டெல்லியின் ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

முன்னதாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் அனைத்து மாவட்ட மேஜிஸ்டிரேட்கள், மூத்த காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு அம்மாநில போக்குவரத்து கழகம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

லாக் டவுனில் யார் யாருக்கு, எந்தெந்த சேவைகளுக்கு அனுமதி?- முழு விவரம்!

அதாவது டெல்லியில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களை மீட்டுக் கொண்டு வருவதற்கு புறப்பட்டுச் செல்லும் 200 சிறப்பு பேருந்துகளின் இயக்கத்திற்கு தடை ஏற்படும் வகையில் செயல்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை முதல் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதன்மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.

குறிப்பாக சமூக விலகல் ஒன்றே கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் வராமல் தடுக்கும் ஒரே வழி என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று மாலை நிலவரப்படி 873 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி