ஆப்நகரம்

சோறு இல்லை, புலம் பெயர் தொழிலாளர்கள் வேலைக்கு படையெடுப்பு...

உத்தரப் பிரதேசத்தில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அரசு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தாலும், அதைக் கண்டு கொள்ளாமல் வெளி மாநிலத்திற்குப் புறப்படத் தொடங்கிவிட்டனர்.

Samayam Tamil 30 Jun 2020, 8:45 am
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல நாட்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொருளாதார வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil சோறு இல்லை, புலம் பெயர் தொழிலாளர்கள் வேலைக்கு படையெடுப்பு...
சோறு இல்லை, புலம் பெயர் தொழிலாளர்கள் வேலைக்கு படையெடுப்பு...


நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் வேறு மாநிலங்களில் வசித்து, பணிபுரிந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையின்றி, வருமானமின்றி தங்களது சொந்த ஊருக்குப் புறப்பட்டனர். இதற்கிடையே இப்படிச் செல்பவர்களுக்கு பொது போக்குவரத்து இல்லாததால் இவர்கள் பல மையில் தூரம் நடந்தே சென்றனர்.

இப்படி உத்தரப் பிரதேசத்தில் 30 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவில் அதிக நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தரப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள சிறு ஆலைகள் உள்படத் தொழில் நிறுவனங்களில் 60 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. எனினும், இதைப் பற்றிக் கண்டு கொள்ளாத குறிப்பிட்ட தொழிலாளர்கள், புலம் பெயர்ந்து பணிகளை மேற்கொள்ளவே ஆர்வம் காட்டி வருகின்றனர். சிலர் வேறு ஊர்களுக்குப் புறப்படவும் தொடங்கிவிட்டனர்.

வாயுக்கசிவால் அடுத்தடுத்து பலி; பலர் பாதிப்பு - விசாகப்பட்டினத்தில் மீண்டும் அதிர்ச்சி!

வேறு மாநிலத்திற்கு பணிக்குப் புறப்பட்ட ஆயிரக்கணக்கானோர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் குவியத்தொடங்கி உள்ளனர். அங்கிருந்து மகாராஷ்டிரா, குஜராத் செல்வதற்கு ரயில்களை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட தொழிலாளர் கூறுகையில், “உத்தரப் பிரதேசத்தில் வேலை இருப்பினும் நாங்கள் ஊர் திரும்பப் போவதில்லை. நாங்கள் வேலை பார்த்து வந்த நிறுவனம் இன்னும் பணியைத் தொடங்கவில்லை. எனினும், எங்களுக்குத் தெரிந்த வேலையைத் தேடிச் செல்கிறோம். பசியை விட கொரோனா மேலானது. எங்கள் குழந்தைகள் பசியால் பலியாவதற்குப் பதில் நாங்கள் கொரோனா வந்து இறப்பதே மேல்” என்றனர்.

அடுத்த செய்தி