ஆப்நகரம்

ரயிலில் புகைப்பிடிக்க எதிா்ப்பு தொிவித்த கா்ப்பிணி கழுத்தை நெறித்து கொலை

ஓடும் ரயிலில் புகைப்பிடிப்பதற்கு எதிா்ப்பு தொிவித்த கா்ப்பிணி கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 11 Nov 2018, 3:27 pm
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓடும் ரயில் புகைப்பிடிப்பதற்கு எதிா்ப்பு தொிவித்த கா்ப்பிணி கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
Samayam Tamil Death Body


பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் சைனத் தேவி (வயது 45). கா்ப்பிணியான இவா் பிகாா் மாநிலத்தில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த வெள்ளிக் கிழமை இரவு பஞ்சாப்பில் இருந்து பிகாா் செல்லும் ஜாலியன்வாலா விரைவு ரயிலில் பயணித்துள்ளாா்.

அப்போது அவருடன் பயணம் செய் சக பயணியான சோனு யாதவ் ஓடும் ரயிலில் புகைப்பிடித்துள்ளாா். சைனத் தேவி ரயிலில் புகைப்பிடிக்கக் கூடாது என்று எதிா்ப்பு தொிவித்துள்ளாா். ஆனால், அதையும் மீறி சோனு யாதவ் புகைப்பிடித்துள்ளாா்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே சோனு, சைனத்தின் கழுத்தை நெறித்துள்ளாா். இதில் சைனத் மயங்கி விழுந்துள்ளாா். ரயில் உத்தரபிரதேச மாநிலம் ஷெகாங்பூா் ரயில் நிலையத்திற்கு வந்ததும் அப்பெண் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் சைனத் உயிாிழந்துவிட்டதாக தொிவித்துள்ளனா்.

இதனைத் தொடா்ந்து சோனு யாதவ்கை கைது செய்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அடுத்த செய்தி