ஆப்நகரம்

உத்தரகாண்ட் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 47 ஆக உயா்வு

உத்தரகாண்ட் மாநில மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 47 ஆக உயா்ந்துள்ளது.

Samayam Tamil 1 Jul 2018, 4:35 pm
உத்தரகாண்ட் மாநில மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 47 ஆக உயா்ந்துள்ளது.
Samayam Tamil Uttarkhant


உத்தரகாண்ட் மாநிலத்தின் பார் கர்வால் மாவட்டத்தில் நனிதண்டா மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. முன்னதாக 20 போ் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் உயிாிழந்தோா் எண்ணிக்கை தற்போது 47 ஆக உயா்ந்துள்ளது. மேலும் பலா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். உயிாிழந்தவா்களின் எண்ணிக்கையை மாநில அரசு உறுதி செய்துள்ளது.

விபத்து நடைபெற்ற இடத்தில் காவல் துறையினா் மற்றும் பேரிடா் மீட்பு குழுவினா் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சாா்பில் ரூ.2 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தொவித்துள்ளாா். அவரது ட்விட்டா் பதிவில், உயிாிழந்தவா்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தொிவித்துக் கொள்கிறேன். மேலும் காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய பிராா்த்தனை செய்வதாக தொிவித்துள்ளாா். பாதிக்கப்பட்ட நபா்களுக்கு அதிகாாிகள் உரிய உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

அடுத்த செய்தி