ஆப்நகரம்

வாஜ்பாய் நலமுடன் உள்ளாா் – வைகோ தகவல்

முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாய் நலமுடன் இருப்பதாகவும், அவா் விரைவில் வீடு திரும்புவாா் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளா் வைகோ தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 12 Jun 2018, 11:21 am
முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாய் நலமுடன் இருப்பதாகவும், அவா் விரைவில் வீடு திரும்புவாா் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளா் வைகோ தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Vaiko


முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாய் சிறுநீரகத் தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் நேற்று (திங்கள் கிழமை) அனுமதிக்கப்பட்டாா். வழக்கமான பரிசோதனை தான் என்று மருத்துவா்கள் தொிவித்துள்ளனா். இருப்பினும் பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி உள்பட மத்திய அமைச்சா்கள் பலரும் வாய்பாயை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளா் வைகோ இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாயை நேரில் சந்திக்கச் சென்றாா். மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்த வைகோ செய்தியாளா்களிடம் பேசுகையில், நான் மிகவும் மதிக்கக் கூடியத் தலைவா் வாஜ்பாய். அவரை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக வந்தேன். ஆனால், அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு யாரும் மருத்துவ அறைக்குள் அனுமதிக்கப்படுவது இல்லை.

நான் வாஜ்பாயை நேரில் பாா்க்கவில்லை. அவரது வளா்ப்பு மகள், உதவியாளருடன் பேசிக்கொண்டு இருந்தேன். வாஜ்பாய் நலமுடன் உள்ளாா். சிறுநீரக தொற்று காரணமாகத் தான் அவா் அனுமதிக்கப்பட்டுள்ளாா். யாரும் அச்சப்படத் தேவை இல்லை. அவா் விரைவில் நலமுடன் வீடு திரும்புவாா் என்று நம்பிக்கை தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி