ஆப்நகரம்

வரிப்பணத்தை வீணாக்கும் செயல்; திப்பு ஜெயந்திக்கு எதிராக பாஜக போராட்டம்!

பெங்களூரு: திப்பு ஜெயந்தி விழா கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 10 Nov 2018, 11:05 am
மைசூர் அரசை ஆண்ட திப்பு சுல்தான், ஹைதர் அலியின் மகன் ஆவார். இரண்டாம் ஆங்கில - மைசூர்ப் போரில் ஆங்கிலேயருக்கு எதிராக ஹைதர் அலி வென்றதற்கு திப்பு சுல்தான் உறுதுணையாக இருந்தார்.
Samayam Tamil Tipu Jayanti


தனது தந்தையின் மறைவிற்கு பின், மைசூரின் மன்னன் ஆனார். இவரது பிறந்த நாளை, திப்பு ஜெயந்தி விழா என்று கர்நாடக அரசு கொண்டாடி வருகிறது. இதற்கான ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் இன்று செய்யப்பட்டன.

ஆனால் திப்பு சுல்தான் இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளார். எனவே அவரது ஜெயந்தி விழாவை அரசு நடத்தக் கூடாது என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. மேலும் விழா அழைப்பிதழில் பாஜகவினர் பெயரை அச்சிட வேண்டாம் என்று மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது.

இந்த சூழலில் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள விருந்தினர் அரங்கில் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே திப்பு ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது. அதேசமயம் கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திப்பு ஜெயந்தி விழாவால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். மடிகேரி பகுதியில் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்களைப் போலீசார் கைது செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி