ஆப்நகரம்

கொரோனா: திருப்பதியில் வழக்கத்துக்கு மாறாக நடைபெறும் வசந்த உற்சவம்!!

கொரோனா வைரஸ் தொற்று அச்சம், ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றின் காரணமாக, திருமலை திருப்பதி மலையில் வருடாந்திர வசந்த உற்சவம் வழக்கத்திற்கு மாறாக, ஏழுமலையான் கோவிலுக்குள் இன்று (ஏப்ரல் 5) தொடங்கியது.

Samayam Tamil 5 Apr 2020, 10:24 pm
திருப்பதி மலையில் ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்கள் ஏழுமலையான் கோவில் பின்புறம் உள்ள வசந்த மண்டபத்தில் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
Samayam Tamil lord balaji


ஆனால், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று, ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றின் காரணமாக ஏழுமலையான் கோவில் உள்ள சம்பங்கி பிரகார மண்டபத்தில் இன்று வசந்த உற்சவம் தொடங்கியது.

இதுகுறித்து, ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சதலு கூறும்போது, "வேலை வெட்டி இல்லாத ஒரு சிலர், சமூக வலைதளங்களில் ஏழுமலையான் கோவிலை மையமாக வைத்து தேவையில்லாத பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். ஒவ்வொரு முறையும் அவற்றுக்கு அளிக்க வேண்டியுள்ளது.

இருளில் மூழ்கி அகல் விளக்கில் ஒளிர்ந்தது இந்தியா!
இன்று துவங்கிய மூன்று நாள்கள் வசந்த உற்சவத்தின் முதல் நாள் நிகழ்ச்சிகள் சாஸ்திர ரீதியாக சரியான முறையில் நடைபெற்றன. இரண்டாவது நாளில் திருப்பதி மலையில் ஏழுமலையானின் தங்க தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

ஆனால், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, வசந்த உற்சவத்தின் இரண்டாவது நாளான நாளை திருப்பதி மலையில் ஏழுமலையானின் தங்கத் தேரோட்டம் நடைபெறாது.

Fake Alert: டெல்லி நிஜாமுதீன் பிரச்சினைக்கு பிறகுதான் திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்பட்டதா?

அதற்கு பதிலாக, உற்சவர் மலையப்பசாமியை சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருள செய்து கோவில் கொடிமரம் அருகில் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று தீட்சதலு தெரிவித்தார்.

அடுத்த செய்தி