ஆப்நகரம்

அம்பானி வீட்டில் வெடிபொருள்.. போலீஸ் பாதுகாப்பு தீவிரம்!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி வீட்டுக்கு அருகே வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 25 Feb 2021, 11:24 pm
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி மும்பையில் வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கு அருகே வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil vehicle with explosives found near mukesh ambani residence in mumbai
அம்பானி வீட்டில் வெடிபொருள்.. போலீஸ் பாதுகாப்பு தீவிரம்!


புதுச்சேரியில் ஆளுநர் ஆட்சி.. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்!
இதுகுறித்து மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் பேசியபோது, “மும்பையில் உள்ள முகேஷ் அம்பானி வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் நின்றுகொண்டிருந்த ஸ்கார்பியோ காரில் ஜெலாட்டின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மை வெளியே வரும்” என்று தெரிவித்துள்ளார்.

இன்று மாலையில் கார்மிகேல் சாலையில் சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு கார் நின்றுகொண்டிருந்ததாக போலீஸ் வட்டாரத்தில் கூறுகின்றனர். இதையடுத்து பாம்ப் ஸ்குவாடுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பாம்ப் ஸ்குவாடும், மற்ற போலீஸ் குழுக்களும் கார்மிகேல் சாலைக்கு விரைந்தனர்.

பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 20 ஜெலாட்டின் குச்சிகள் இருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்றுக்கொண்டிருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது, சம்பந்தப்பட்ட வாகனம் நேற்று இரவு 1 மணிக்கு அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அம்பானி வீடு இருக்கும் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியை மும்பை காவல்துறையின் சீனியர் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

அடுத்த செய்தி