ஆப்நகரம்

வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பாக கேரளாவுக்கு ரூ. 1 கோடி நிதியுதவி!

கேரளா வெள்ள நிவராணப்பணிகளுக்காக வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பாக ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.

Samayam Tamil 28 Aug 2018, 12:35 am
சென்னை: கேரளா வெள்ள நிவராணப்பணிகளுக்காக வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பாக ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.
Samayam Tamil 3


கேரளாவில் கடுமையான வெள்ளம் பாதிக்கப்பட்டு 387 பேருக்கும் அதிகமானனோர் பலியாகினர். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மிக அதிகமாக வெள்ளம் பாதித்தது.

இந்நிலையில் அங்கு நிவாரண பணிகள் நடக்கிறது. இதற்காக பலரும் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பாக ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்நிறுவனத்தின் சார்பு, வேலை செய்யும் பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்களிடம் வசூல் செய்த பணத்தை வேலம்மாள் நிறுவனம் சார்பாக முத்துராமலிங்கம் கேரள முதல்வர் பிரனாயி விஜயனிடம் ஒப்படைத்தார்.

அடுத்த செய்தி