ஊடகங்கள் விவசாய பிரச்சனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் வீட்டில் விவசாயிகள் அவரை சந்தித்தனர். அப்போது அவர் கூறியிருப்பதாவது அப்போது அவர் பேசுகையில், இந்தியா இப்போதும் விவசாய நாடாகவே திகழ்ந்து வருகிறது. ஆனாலும் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆன நிலையிலும் 18,000 க்கும் மேற்பட்ட கிராமங்கள் மின் இணைப்பு இல்லாமல் உள்ளன. முறையற்ற பருவ மாற்றத்தின் காரணமாக விவசாயம் லாபகரமற்ற தொழிலாக மாறிவிட்டது.
இதனால் விவசாய மக்கள் விவசாயத்தை விட்டு விலகிச் செல்வது அதிகரித்து வருகிறது. விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. மோசமான சாலைகள், மின் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளில் கவனம் செலுத்தும் ஊடகங்கள் கிராமங்களையும், அங்கு விவசாயிகள் படும் அல்லல்களையும் கண்டுகொள்வதில்லை.
சுமை புரட்சி மற்றும் பல்வேறு வளர்ச்சி காரணிகள் இருந்த போதிலும் விவசாயிகளின் வருவாய் உயரவில்லை. இதனால் பல விவசாயிகள் விவசாயத்தை கைவிட முன்வந்துள்ளனர். விவசாயிகள் என்னை சந்திக்க வந்ததில் மகிழ்ச்சி. இந்த இல்லத்துக்கு வெளியுறவு தூதர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பல தரப்பட்ட பிரமுகர்கள் வந்து சென்றுள்ளனர். ஆனால் விவசாயிகளின் வருகைதான் என்னை, எனது பழைய நினைவுகளை அசைபோட வைத்தது. எனது எண்ணங்கள் எல்லாம் இப்போதும் கிராமங்களில்தான் உள்ளது என்றார்.
venkaiah naidu advice to indian media
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் வீட்டில் விவசாயிகள் அவரை சந்தித்தனர். அப்போது அவர் கூறியிருப்பதாவது அப்போது அவர் பேசுகையில், இந்தியா இப்போதும் விவசாய நாடாகவே திகழ்ந்து வருகிறது. ஆனாலும் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆன நிலையிலும் 18,000 க்கும் மேற்பட்ட கிராமங்கள் மின் இணைப்பு இல்லாமல் உள்ளன. முறையற்ற பருவ மாற்றத்தின் காரணமாக விவசாயம் லாபகரமற்ற தொழிலாக மாறிவிட்டது.
இதனால் விவசாய மக்கள் விவசாயத்தை விட்டு விலகிச் செல்வது அதிகரித்து வருகிறது. விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. மோசமான சாலைகள், மின் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளில் கவனம் செலுத்தும் ஊடகங்கள் கிராமங்களையும், அங்கு விவசாயிகள் படும் அல்லல்களையும் கண்டுகொள்வதில்லை.
சுமை புரட்சி மற்றும் பல்வேறு வளர்ச்சி காரணிகள் இருந்த போதிலும் விவசாயிகளின் வருவாய் உயரவில்லை. இதனால் பல விவசாயிகள் விவசாயத்தை கைவிட முன்வந்துள்ளனர். விவசாயிகள் என்னை சந்திக்க வந்ததில் மகிழ்ச்சி. இந்த இல்லத்துக்கு வெளியுறவு தூதர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பல தரப்பட்ட பிரமுகர்கள் வந்து சென்றுள்ளனர். ஆனால் விவசாயிகளின் வருகைதான் என்னை, எனது பழைய நினைவுகளை அசைபோட வைத்தது. எனது எண்ணங்கள் எல்லாம் இப்போதும் கிராமங்களில்தான் உள்ளது என்றார்.
venkaiah naidu advice to indian media