ஆப்நகரம்

போலி சாமியார் குர்மீத் மீதான கொலை வழக்கில் இன்று தீர்ப்பு

பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் உள்ள போலி சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் செய்தியாளரை கொலை செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது. இதனால் ஹரியானாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு.

Samayam Tamil 11 Jan 2019, 1:52 pm
செய்தியாளர் கொலை தொடர்பான குர்மீத் ராம் ரஹீமுக்கு எதிரான வழக்கில் பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
Samayam Tamil 1546852066-Ram_Rahim_Singh


தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். கடந்த 1999-ஆம் ஆண்டு தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கில் 20ஆண்டு சிறை தண்டனை பெற்ற குர்மீத் சிறையில் உள்ளார்.

இந்நிலையில், ராம் ரஹீம் பற்றிய உண்மைகளை வெளியிட்ட செய்தியாளர் ராம்சந்தர் சத்ரபதி 2002ஆம் ஆண்டு குர்மீத்தின் ஆட்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார் என புகார் எழுந்தது.

குர்மீத் ராம் ரஹீம், குல்தீப், நிர்மல், கிரிசன்லால் ஆகியோர் மீது இது தொடர்பாக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பளிக்கிறது. இதை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சிர்சாவில் தேரா சச்சா சவுதா தலைமையகம் உள்ள பகுதியில் காவல்துறையினர் ரோந்து மேற்கொண்டுள்ளனர். பாலியல் பலாத்கார வழக்கில் குர்மீத்க்கு 20ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டபோது பஞ்சாப், அரியானா மாநிலங்களில் அவரது ஆதரவாளர்கள் கலவரத்தை ஏற்படுத்தியது நினைவூட்டத்தக்கது.

அடுத்த செய்தி