ஆப்நகரம்

​விஜய் மல்லையா மீண்டும் லண்டனில் கைது!!

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவை லண்டன் போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.

TOI Contributor 3 Oct 2017, 5:49 pm
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவை லண்டன் போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.
Samayam Tamil vijay mallya arrested in london
​விஜய் மல்லையா மீண்டும் லண்டனில் கைது!!


இந்தியாவில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கி அதை பிரபல தொழிலதிபர் மல்லையா திருப்பி செலுத்தவில்லை. இந்தக் குற்றத்தின் கீழ் சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ், அவர் மீது மத்திய அமலாக்கத்துறை கிரிமினல் வழக்கு தொடர்ந்தது.

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் மல்லையா தனது சிறப்பு பாஸ்போர்ட்டை பயன்படுத்தி திடீரென லண்டனுக்கு சென்று விட்டார். லண்டனில் தங்கி இருந்த அவருக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு பல முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது. அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது.

அவரை கைது செய்து ஒப்படைக்குமாறு பிரிட்டன் அரசுக்கு இந்தியா தரப்பில் பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது. அமலாக்கத்துறை அவரை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. பிரிட்டன் வெளியுறவுத்துறையிடம் அதற்கான ஆணவங்களையும் இந்தியா சமர்ப்பித்தது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் லண்டனில் விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சில மணி நேரத்தில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று அவரை மீண்டும் லண்டன் போலீசார் கைது செய்துள்ளனர்.

Vijay Mallya arrested in London

அடுத்த செய்தி