தொழிலதிபர் விஜய் மல்லையா, மும்பை அமலாக்கத்துறை முன்பாக, விசாரணைக்கு ஆஜராகக் கால அவகாசம் கோரியுள்ளார்.
விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், முறைகேடான பணப்பரிவர்த்தனை செய்ததாகவும், இதில், விஜய் மல்லையா உள்ளிட்டோருக்கு தொடர்பு உள்ளதாகவும் கூறி கடந்த ஆண்டு சிபிஐ., எப்ஐஆர் பதிவு செய்திருந்தது. இதன்பேரில், விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, விஜய் மல்லையாவுக்கு, மும்பை அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மார்ச் 18ம் தேதி மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெறும் என்றும் கூறப்பட்டது. இதில் விஜய் மல்லையா பங்கேற்பாரா, இல்லையா என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் கால அவகாசம் கோரியுள்ளார். இத்தகவலை, அமலாக்கத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். அவரது கோரிக்கையை ஏற்பதா, இல்லையா என்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும், அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், முறைகேடான பணப்பரிவர்த்தனை செய்ததாகவும், இதில், விஜய் மல்லையா உள்ளிட்டோருக்கு தொடர்பு உள்ளதாகவும் கூறி கடந்த ஆண்டு சிபிஐ., எப்ஐஆர் பதிவு செய்திருந்தது. இதன்பேரில், விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, விஜய் மல்லையாவுக்கு, மும்பை அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மார்ச் 18ம் தேதி மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெறும் என்றும் கூறப்பட்டது. இதில் விஜய் மல்லையா பங்கேற்பாரா, இல்லையா என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் கால அவகாசம் கோரியுள்ளார். இத்தகவலை, அமலாக்கத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். அவரது கோரிக்கையை ஏற்பதா, இல்லையா என்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும், அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.