ஆப்நகரம்

விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பங்குகள் ரூ.1008 கோடிக்கு விற்பனை

யுனெட்டட் பிருவரிஸ் நிறுவனத்தில், விஜய்மல்லையாவுக்கு சொந்தமாக இருந்த பங்குகள், ஆயிரத்து 8 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 27 Mar 2019, 8:36 pm
யுனெட்டட் பிருவரிஸ் நிறுவனத்தில், விஜய்மல்லையாவுக்கு சொந்தமாக இருந்த பங்குகள், ஆயிரத்து 8 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
Samayam Tamil vijay-mallya


9 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் ஏய்ப்பு புகாரில், தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய்மல்லையாவை, லண்டனில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருதவற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வழக்கின் ஒருபகுதியாக விஜய் மல்லையாவுக்கு சொந்தமான யுனெட்டட் பிருவரிஸ் நிறுவனத்தின் 74 லட்சம் பங்குகள் முடக்கப்பட்டன.

கிங் பிஷ்ஷர் நிறுவனத்திற்காக அந்த பங்குகளை யெஸ் வங்கியில் அடமானம் வைத்து விஜய்மல்லையா கடன்பெற்றிருந்தார். அந்த பங்குகளை கடன் மீட்பு தீர்ப்பாயத்திடம் ஒப்படைக்கும்படி யெஸ் வங்கிக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஒப்படைக்கப்பட்ட பங்குகள் ஆயிரத்து 8 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி