ஆப்நகரம்

குஜராத்: ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய் ருபானி

குஜராத் மாநிலத்தில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள விஜய் ருபானி ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரி மாநில கவர்னர் ஓ.பி. கோஹ்லியிடம் கடிதம் கொடுத்தார்.

TOI Contributor 6 Aug 2016, 1:27 pm
குஜராத் மாநிலத்தில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள விஜய் ருபானி ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரி மாநில கவர்னர் ஓ.பி. கோஹ்லியிடம் கடிதம் கொடுத்தார்.
Samayam Tamil vijay rupani met gujarat governor op kohli stakes claim to form government
குஜராத்: ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய் ருபானி


குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்த ஆனந்தி பென் பட்டேல் வயதை காரணமாகக் கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பாஜக கட்சி குஜராத் மாநில முதல்வராக விஜய் ருபானியை நேற்று தேர்வு செய்தது. துணை முதல்வராக அமித் பட்டேல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், அந்த மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரி இன்று காலை அகமதாபாத்தில் உள்ள ராஜ்பவனுக்கு சென்று கவர்னர் ஓ.பி. கோஹ்லியிடம் விஜய் ருபானி கடிதம் கொடுத்தார்.

குஜராத் முதல்வராக நாளை விஜய் ருபானி பதவியேற்கலாம் என்று கூறப்படுகிறது. முதல்வர் அறிவிப்பு வெளியாகும் வரை அமித் பட்டேல்தான் முதல்வராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில், இறுதியில் பிரதமர் மோடியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பின் மூலம் விஜய் ருபானி முதல்வரானார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. பாஜக தேசிய இணை பொதுச் செயலாளர் வி. சதீஷ் தலையிட்டு, விஜய் ருபானியை முதல்வராக்கினார் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி