ஆப்நகரம்

நிா்மலா சீதாராமனுக்கு பதவி வழங்கப்பட்டதற்கு விஜயதாரணி எதிா்ப்பு

நிர்மலா சீதாராமனுக்கு மத்திய அமைச்சா் பதவி அளித்தது தமிழக மக்களின் உணர்வுகளை கிண்டல் செய்வதுபோல் உள்ளது என்று விஜயதாரணி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

TOI Contributor 4 Sep 2017, 4:54 am
நிர்மலா சீதாராமனுக்கு மத்திய அமைச்சா் பதவி அளித்தது தமிழக மக்களின் உணர்வுகளை கிண்டல் செய்வதுபோல் உள்ளது என்று விஜயதாரணி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
Samayam Tamil vijayatharanis appeal to nirmala seetharamans post was granted
நிா்மலா சீதாராமனுக்கு பதவி வழங்கப்பட்டதற்கு விஜயதாரணி எதிா்ப்பு


பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், கடந்த சில மாதங்களு்ககு முன்பு கோவா முதல்–மந்திரியாக பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து அவர் ராணுவ மந்திரி பதவியை விட்டு விலகினார். நிதி மந்திரி அருண் ஜெட்லி, ராணுவ இலாகாவை கூடுதலாக கவனித்து வந்தார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையை மாற்றி அமைத்தார். அவர் வர்த்தக, தொழில் துறையை தனிப்பொறுப்பாக கவனித்து வந்த ராஜாங்க மந்திரி பதவியில் இருந்து, நிர்மலா சீதாராமனை கேபினட் அமைச்சராக அந்தஸ்து உயர்த்தி, அவரை புதிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆக்கினார்.

இந்த நிலையில் இது குறித்து விஜயதாரணி எம்.எல்.ஏ. கூறியதாவது:

நீட்தேர்வு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட, தமிழக அரசு அனிதா சட்டம் கொண்டுவர வேண்டும். அனிதா உயிரிழந்த நிலையில், நிர்மலா சீதாராமனுக்கு பதவி அளித்தது தமிழகமக்களின் உணர்வை கிண்டல் செய்வதுபோல் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி