ஆப்நகரம்

கிரிக்கெட் விளையாடும் போது மோதல்: வாலிபர் குத்திக் கொலை

ஆந்திர மாநிலத்தில் கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 19 Apr 2017, 1:10 pm
ஆந்திர மாநிலத்தில் கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil vijayawada youth stabbed to death following fight over cricket
கிரிக்கெட் விளையாடும் போது மோதல்: வாலிபர் குத்திக் கொலை


மகாத்மா காந்தி சாலையில் உள்ள டெலிகாம் காலனியில் கடந்த செவ்வாய்க்கிழமை கிரண் குமார், எனும் பொறியியல் மாணவர் அப்பகுதியில் உள்ள சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடியபோது, அந்த வழியே வந்த தேவகி தேவி என்பவர் மீது தெரியாமல் பந்துபட்டது.

இதற்காக கிரண் குமார் மன்னிப்புக் கேட்டும் கோபம் தணியாத அப்பெண்ணின் மகன் ஸ்ரீகாந்த் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த் வீட்டிற்குள் சென்று கத்தியை எடுத்துவந்து கிரண் குமாரின் மார்பில் குத்தியுள்ளார்.இதில் கிரண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது, கிரண் குமாருக்கும், ஸ்ரீகாந்துக்கும் ஏற்கனவே முன்பகை இருந்ததாகவும், இருவரும் அடிக்கடி மோதிக் கொள்வார்கள் எனவும் அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் அதிகம் விளையாடும் தெருவில் ஸ்ரீகாந்த் வேகமாக பைக் ஒட்டிச் செல்வதாக பலமுறை கிரண் குமார் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. முன்பகை காரணமாக கிரண் குமாரை ஸ்ரீகாந்த் கொலை செய்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Fight over a game of cricket on a street here in Andhra Pradesh has led to murder of a youth, police said.

அடுத்த செய்தி