ஆப்நகரம்

பெண்ணின் கன்னித்தன்மையை சோதித்த கணவர் மீண்டும் இணைந்தார்!

பெண்ணின் கன்னித்தன்மையை சோதித்த கணவர் மீண்டும் இணைந்தார்!

TOI Contributor 13 Aug 2016, 2:44 pm
திருமணத்திற்கு பிறகு பெண்ணின் கன்னித்தன்மையை சோதித்த மணமகனின் கிராமத்தினர், அந்த பெண்ணை அவரது பிறந்த வீட்டிலேயே கொண்டு போய் விட்டனர்.
Samayam Tamil villagers did virginity test for newly married woman
பெண்ணின் கன்னித்தன்மையை சோதித்த கணவர் மீண்டும் இணைந்தார்!


கடந்த மே மாதம் யோகிதா எனும் பெண்ணை அர்ஜூன் என்பவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள், மேலும் அவர்களின் சமூகத்தில் கன்னித்தன்மையை முதன்மையாக கருதுபவர்கள் என்று சொல்லிக்கொள்வதால், திருமணமான பெண்ணுக்கு கன்னித்தன்மையை கண்டறியும் பரிசோதனை வைத்தனர். ஆனால் அந்த சோதனையில் அந்த பெண் தோல்வியுற்றதாக கூறி அவரது பிறந்த வீட்டில் கொண்டு விட்டனர். அதன் பின்பு பெண்ணின் தந்தை அவரை வீட்டுக்காவலில் வைத்தார்.

காவல்துறையில் சேர பயிற்சி பெற்று வந்த யோகிதா, இவ்வாறாக நடந்து கொண்டதற்கு அர்ஜூன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவர் திருமணம் அல்லது சிறையை தேர்ந்தெடுக்கும் இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளதாக கூறினார். புகைப்படத்துடன் மும்பை மிர்ரரில் செய்தி வெளிவந்ததை அடுத்து அர்ஜூன், யோகிதாவிடம் கடைசி வரை சந்தோஷமாக வாழலாம், நன்றாக பார்த்துக்கொள்வதாக உறுதி அளித்து தன்னுடன் அழைத்துச்சென்றுள்ளார்.

அடுத்த செய்தி