ஆப்நகரம்

வினோத் காம்ளி மனைவி ஆண்ட்ரியா மீது புகார்

இசையமைப்பாளர் அன்கித் திவாரியின் தந்தையைத் தாக்கியதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ளியின் மனைவி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Samayam Tamil 2 Jul 2018, 3:25 pm
இசையமைப்பாளர் அன்கித் திவாரியின் தந்தையைத் தாக்கியதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ளியின் மனைவி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Samayam Tamil 2-vinod-kambli-wife-in-mall-bust-up-with-old-age-man-and-his-son


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ளி. இவரது மனைவி ஆண்ட்ரியா ஹெவிட். இருவரும் ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றுக்குச் சென்றிருக்கிறார்கள்.

அப்போது, ஆண்ட்ரியா தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக ஒரு முதியவரைத் தாக்கியுள்ளார். வினோத் காம்ளியும் அந்த முதியவரையும் அவரது மகனையும் தாக்கியிருக்கிறார்.

தாக்கப்பட்ட அந்த முதியவர் இசையமைப்பாளர் அன்கித் திவாரியின் தந்தை ஆர்.கே. திவாரி. அவருடன் தாக்கப்பட்ட மற்றொருவர் அன்கித் திவாரியின் சகோதரர் அன்கூர் திவார். இதனையடுத்து காம்ளி மற்றும் ஆண்ட்ரியா மீது அன்கிட் திவாரியின் தந்தை தரப்பில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அன்கிட் திவாரியின் தந்தை தனது மனைவியை தவறான விதமாக தொட்டதாகவும் அதனால்தான் தாக்கியதாகவும் காம்ளி கூறியுள்ளார். ஆனால், ஆர்.கே.திவாரியின் மகன் அன்கூர் திவாரி இதனை மறுத்துள்ளார்.

அடுத்த செய்தி