ஆப்நகரம்

வன்முறையை சகித்து கொள்ள முடியாது –பிரதமர் மோடி

வன்முறையை ஒருபோதும் சகித்து கொள்ள முடியாது என பிரதமர் மோடி மான்கி பாத் வானொலி நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

TNN 27 Aug 2017, 2:16 pm
வன்முறையை ஒருபோதும் சகித்து கொள்ள முடியாது என பிரதமர் மோடி மான்கி பாத் வானொலி நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
Samayam Tamil violence cannot tolerate pm modi
வன்முறையை சகித்து கொள்ள முடியாது –பிரதமர் மோடி


பிரதமர் மோடி மாதத்தின் இறுதி ஞாயிற்று கிழமைகளில் அகில இந்திய வனொலியின் மங்கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் பொது மக்களிடையே உரையாற்றி வருகிறார். இதில் பல திட்டங்கள், நாட்டுநடப்புகள், அரசாங்கத்தின் தற்போதைய நிலவரங்கள் என அனைத்தையும் பற்றி மக்களிடையே பகிர்ந்து வருகிறார்.

இன்று காலை 11 மணிக்கு வானொலியில் பேசிய பிரதமர் ஹரியானாவி நடந்த கலவரத்தை எதிர்க்கும் விதமாக மதத்தின் பெயரால் சட்டம், ஒழுங்கை யாரும் கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது என்றும் சட்டத்தின் பிடியிலிருந்து குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்றும் கூறினார்.

இதில், கோரக்பூர் குழந்தைகள் பலி, ரயில் விபத்துகள், மத வாதம் குறித்து பிரதமர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

Violence cannot tolerate- PM Modi

அடுத்த செய்தி