ஆப்நகரம்

வீர் சக்ரா விருது பெற்ற முன்னாள் ராணுவ கேப்டன் உயிாிழப்பு

இந்திய ராணுவத்தில் வழங்கப்படும் உயாிய விருதுகளில் ஒன்றான வீர் சக்ரா விருது பெற்ற முன்னாள் ராணுவ கேப்டன்பாரத் சிங் உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை உயிாிழந்தாா்.

TOI Contributor 23 Sep 2017, 4:26 am
இந்திய ராணுவத்தில் வழங்கப்படும் உயாிய விருதுகளில் ஒன்றான வீர் சக்ரா விருது பெற்ற முன்னாள் ராணுவ கேப்டன் பாரத் சிங் உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை உயிாிழந்தாா்.
Samayam Tamil vir chakra recipient dead
வீர் சக்ரா விருது பெற்ற முன்னாள் ராணுவ கேப்டன் உயிாிழப்பு


இந்திய ராணுவத்தில் விங் கமாண்டராக பணியாற்றியவா் பாரத் சிங். இவா் கடந்த 1965-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானம் ஒன்றை இந்திய எல்லைக்குள் நுழைய விடாமல் எல்லைப் பகுதியிலேயே சுட்டு வீழ்த்தினார்.

துாிதமாக செயல்பட்டு பாராட்டத்தக்கும் வகையில் பணியாற்றிய காரணத்தால் ராணுவத்தில் வழங்கப்படும் உயரிய விருதான ‘வீர் சக்ரா’ விருது பாரத் சிங்-க்கு அப்போதைய ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வழங்கினார். இவா் கடந்த சில தினங்களாக வயது முதிா்வு மற்றும், உடல்நலக்குறைவோடு காணப்பட்டாா். இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலம் பன்னாவில் வசித்து பாரத் சிங் இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமாணார்.

அடுத்த செய்தி