ஆப்நகரம்

பெட்டிகள் இல்லாமல் 10 கீ.மீட்டர் தூரம் கழண்டு ஓடிய ரயில் விசாகா எக்ஸ்பிரஸ் எஞ்சின்!

ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டம் துனே அருகே விசாகா எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தபோது, பெட்டிகள் துண்டிக்கப்பட்ட நிலையில் ரயில் எஞ்சின் மட்டும் சுமார் 10 கி.மீட்டர் கழண்டு ஓடியது. இதனால் பதறிபோன பயணிகள் உடனே ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் அளித்தனர்!

Samayam Tamil 20 Aug 2019, 10:09 am
விசாகப்பட்டினம் அருகே, பெட்டிகள் துண்டிக்கப்பட்ட நிலையில் ரயில் எஞ்சின் மட்டும் சுமார் 10 கி.மீட்டர் தூரம் கழண்டு ஓடிய பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil பெட்டிகள் இல்லாமல் 10 கீ.மீட்டர் தூரம் கழண்டு ஓடிய ரயில் விசாகா எக்ஸ்பிரஸ் எஞ்சின்!
பெட்டிகள் இல்லாமல் 10 கீ.மீட்டர் தூரம் கழண்டு ஓடிய ரயில் விசாகா எக்ஸ்பிரஸ் எஞ்சின்!


ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து செகந்திராபாத் நோக்கி விசாகா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டம், துனே அருகே சென்று கொண்டிருந்தபோது, எஞ்சினுடன் பெட்டிகளை இணைத்திருந்த இணைப்புக் கம்பி கழன்டு விழுந்து, எஞ்சின் மட்டும் தனியாக ஓடியது. இதனால் பெட்டிகள் அனைத்தும் நக்கப்பள்ளி மற்றும் நர்சிபட்னம் சாலை ரயில் நிலையம் இடையே நின்றன.

Petrol Price: இன்னைக்கு டீசல் விலை எவ்வளவு குறைவு தெரியுமா?
பெட்டிகள் கழண்டதை அறியாத ஓட்டுநர், எஞ்சினை சுமார் 10 கி.மீ தூரத்துக்கு ஓட்டிச் சென்றார். இதையடுத்து பெட்டிகள் தனியாக இருப்பதை பார்த்த பயணிகள், ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து ரயில் ஓட்டுநருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மீண்டும் ரயில் எஞ்சினுடன் நர்சிபட்னம் பகுதிக்கு வந்தார். இதையடுத்து, எஞ்சினுடன் மீண்டும் பெட்டிகள் இணைக்கப்பட்டு வழக்கம்போல் ரயில் இயக்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக ரயில் இயக்கப்பட்டது.

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிகக் கனமழைக்கு வாய்ப்பு!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர். பெட்டிகள் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் ரயில் என்ஜின் மட்டும் தனியே கழண்டு ஓடிய சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேத்திக்கு ஏண்டா போன் பண்ணி டார்ச்சர் பண்றே?- தாத்தாவை கொடூரமாக கொன்ற இளைஞர்கள்!

அடுத்த செய்தி