ஆப்நகரம்

பாஜகவுக்கு ஓட்டுபோடலனா பிரச்சனை வரும்: பொதுமக்களை மிரட்டும் பாஜக தலைவர்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பார்ப்பன்கி தொகுதியில் நடக்கும் தேர்தலில் பாஜகவிற்கு ஓட்டுப்போடவில்லை என்றால் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று பாஜக தலைவர் பேசியது சர்ச்சையைக் கிளிப்பி உள்ளது

TNN 17 Nov 2017, 2:21 pm
உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பார்ப்பன்கி தொகுதியில் நடக்கும் தேர்தலில் பாஜகவிற்கு ஓட்டுப்போடவில்லை என்றால் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று பாஜக தலைவர் பேசியது சர்ச்சையைக் கிளிப்பி உள்ளது.
Samayam Tamil vote for bjp in up or be ready to face problems bjp leader
பாஜகவுக்கு ஓட்டுபோடலனா பிரச்சனை வரும்: பொதுமக்களை மிரட்டும் பாஜக தலைவர்


பார்ப்பன்கி தொகுதியில் நடக்கும் தேர்தலில் பாஜகவின் சார்பாக பாஜகவின் உள்ளூர் தலைவரான ரஞ்சித் குமார் ஸ்ரீவஸ்டவா என்பவரின் மனைவி போட்டியிடுகிறார். ஸ்ரீவஸ்டவா அவரது மனைவிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், பார்ப்பன்கியில் கடந்த நவம்பர் 13 ஆம் தேதி நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்ரீவஸ்டவா, “அரசின் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் பாஜகவுக்கு வாக்களியுங்கள். இல்லையென்றால், நலத்திட்டங்களை மறந்துவிடுங்கள்.

பாஜகவுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று பிச்சை எடுக்கமாட்டேன். பாஜகவுக்கு ஓட்டுப்போட்டால் மட்டுமே நீங்கள் சந்தோஷமாக இருக்க முடியும்” என்று பேசியுள்ளார்.

இவரின் பேச்சு தற்போது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. இவர் மேடையில் பேசும்போது உத்தரப்பிரதேச அமைச்சர்களான தாரா சிங் சவ்கான், ராமாபதி சாஸ்திரி ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து ஸ்ரீவஸ்டவா அளித்தப் பேட்டியில் தான் யாரையும் மிரட்டவில்லை எனவும், பாஜகவுக்கு ஓட்டு போட வேண்டும் என்பதற்காக கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி